kavin

kavin

Friday, December 24, 2010

மன்னார் மதனகோபால் அம்புஜாஸ்ரீ- கமல்ஹாசனின் visual treat.





சுவாரஸ்யமும் குளுமையுமாய் முழுக்க கமலின் ஆளுமையைத் தூவிச்செல்லும் சுவையின்பம். முதல் பாதியில் கமலின் வசீகரத்தில் ஆழ்ந்தும் மறுபாதியில் அவரின் humour techniques -ல் கலகலத்தும் லயிக்கிறது அரங்கம்.
மின்சாரக்கனவுக்கும் இதற்கும் துளியும் தொடர்பில்லை. அந்த flashback பாடல் உட்பட படத்தில் நுட்பமாக நிறையப் புத்தம் புதிய முயற்சிகள்{பேட்டிகளில் கமல் பிரயோகிப்பதைப் போல "கெட்டிக்காரத்தனங்கள்"} கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும்.தேர்ந்த கலைஞனால் மட்டுமே இது சாத்தியம் என்பது புலனாகிறது.
மூன்று இடங்களில் பறவைகள் பறப்பது வருகிறது, அவை உணர்த்தும் உணர்வுகளோ கோடிப் பக்கங்களில் பதியலாம்.தகிடுதத்தம் செய் பாடலுக்காக அரங்கம் காத்திருந்து அராவரிப்பது கண்கூடு. போதிக்கப்பட்ட அறங்களை மறுவாசிப்பு செய்யும் நவீன பிரதி அப்பாடல்.
"என்னைக் கேட்டிருந்தா நான் கொடுத்திருப்பேனே" என்று திரிஷா சொல்வது logic- ல் கொஞ்சம் தாமதம். அந்த விஷயதிற்கு திரைக்கதையில் முன்னமே ஒரு காட்சியோ,வசனமோ ஒரு convincing point கொடுக்காமல் விட்டது மட்டும் சுட்டிக்காட்டலாம்.heroism - kamal கையில் போகும்போது ஒரு uniqueness இருக்கிறது. ரசிக்க முடிகிறது. கமல் ரசிகர்கள் , தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாட மற்றுமொரு கமல்ஹாசன் திருவிழா. உலக நாயகனிடமிருந்து ஒரு கலைத் தெறிப்பு.